செய்திகள் :

'இளையராஜாவுக்கு மரியாதை செய்யணும்னு ஒன்றிய அரசுக்கு புத்தி வரலையே...' - கடுகடுக்கும் வைகோ

post image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆதியில், இசை தமிழில் இருந்துதான் வந்தது என்பதற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் இசைஞானி இளையராஜா செயல்பட்டிருக்கிறார். லண்டனிற்கு சென்று சிம்பொனி இசைத்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்.

இளையராஜா சிம்பொனி

35 நாட்கள் குறிப்புகள் எடுத்து அதனை இரண்டு நாட்களில் பதிவு செய்து லண்டனில் 90 இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைக்க ஓர் அற்புதமான இசைப்படைப்பை தந்திருக்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களின் மனதில் குடிப்புகுந்திருக்கிறார்.

ஆசியக் கண்டத்தில் எவரும் சாதிக்க முடியாததை நம்ம ஊர் பண்ணைக்காரர் இளையராஜா சாதித்துக் காட்டியதை ஒன்றிய அரசு அவர்களின் ஊடகங்களிலும், வானொலியிலும் காண்பிக்காததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மும்பை, கல்கத்தா, டெல்லி என இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவரின் சிம்பொனி இசையின் புகழ் பரவ வேண்டும். தமிழரின் பெருமையை அறியாதவர்கள்தான் வடநாட்டில் அதிகம்.

வைகோ

இசைஞானி வளம் மென்மேலும் உயர வேண்டும். இந்தியா முழுவதும் அவரது இசை பரவ வேண்டும். இளையராஜாவிற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு புத்தி வரவில்லையே. லண்டனில் இருந்து டெல்லி வந்த அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Karthi: `இது மாஸான காம்போ' - கார்த்தியுடன் இணையும் சிம்புவின் கூட்டணி; ஆச்சரிய அப்டேட்

இப்போது நலன் குமாரசாமியின் 'வா வாத்தியார்', பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்தார் 2' படங்களில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்துள்ளார். 'டாணாக்காரன்' தமிழ், ல... மேலும் பார்க்க

`` 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம்" - நெகிழும் கீதா கைலாசம்

அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம், ‘எமகாதகி’. இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா எனப் பலர் நடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் பகிர்ந்த கொட்டாச்சி

நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பல வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன், அவருக்கு அனுப்பிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எழுதி இருக்கும் அந்தக் கடிதத... மேலும் பார்க்க

"ரஜினி முருகன் படத்தை ரஜினி சார் 3 வருஷம் கழிச்சுதான் பாராட்டினார்; ஏன்னா..." - பொன்ராம் பேட்டி

சிவகார்த்திகேயன் - சூரியின் ஜாலி கலாட்டா, ராஜ்கிரண் - சமுத்திரக்கனியின் டார்க் காமெடி என 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஸ்டைலிலேயே வெளியாகி, வரவேற்பைப் பெற்ற படம் 'ரஜினிமுருகன்'. ஒன்பது ஆண்டுகளுக்குப்ப... மேலும் பார்க்க

`நாங்க வேறலெவல் பெர்பாமெர்கள்!' - தமிழ் சினிமாவின் தற்போதைய கவனித்தக்க குணசித்தர நடிகர்கள்| Depth

ஒரு திரைப்படத்தின் கதையை முழுமையாகப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு நடிகர்களின் பங்கு முக்கியமானதொரு விஷயம். எழுத்தைக் காட்சிகளாக பார்வையாளனுக்குக் கடத்துவதில் நடிப்பு ஒரு பிரதான பங்களிப்பைச் செலுத்து... மேலும் பார்க்க

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க