செய்திகள் :

KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு... முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

post image

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செயல்பாட்டால் என்றில்லாமல், ஆடிய அனைத்து வீரர்களின் பங்களிப்புகளால் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. இதில், சைலன்ட்டாக சம்பவம் செய்ததென்றால் அது கே.எல்.ராகுல்தான்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

காரணம், சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முந்தைய இங்கிலாந்துக்கெதிரான தொடரில் பேட்டிங்கில் அக்சர் படேலை இவருக்கு முன்பாக இறக்கி, ஆறாவது, ஏழாவது இடத்தில் இவர் களமிறக்கப்பட்டார். அணியின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், இந்த முடிவுதான் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தது.

மிடில் ஆர்டரில் நங்கூரம் போல நின்று பதட்டமில்லாமல் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதி மற்றும் நியூசிலாந்துக்கெதிரான இறுதிப்போட்டியில் சேஸிங்கில் கடைசிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் 140 ஆவரேஜுடன் 140 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம், விராட் கோலியின் 9 வருட சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்திருக்கிறார். அதாவது, ஐ.சி.சி தொடரில் அதிக ஆவரேஜுடன் ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி கே.எல்.ராகுல் முதலிடம் பிடித்திருக்கிறார்.

விராட் கோலி - கே.எல்.ராகுல்
விராட் கோலி - கே.எல்.ராகுல்

இதற்கு முன்னர், 2016 டி20 உலகக் கோப்பைத் தொடரில் கோலி 5 ஆட்டங்களில் 136.5 ஆவரேஜுடன் 273 ரன்கள் குவித்ததே, ஐ.சி.சி தொடரில் இந்தியரின் அதிகபட்ச ஆவரேஜாக இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தில் முகமது கைஃப் (2002 சாம்பியன்ஸ் டிராபி 130 ஆவரேஜ்), நான்காவது இடத்தில் கோலி (2017 சாம்பியன்ஸ் டிராபி 129 ஆவரேஜ்), ஐந்தாவது இடத்தில சவுரவ் கங்குலி (2000 சாம்பியன்ஸ் ட்ராபி 116 ஆவரேஜ்) ஆகியோர் இருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Rahul Dravid: ஊன்றுகோலுடன் களத்துக்கு வந்த டிராவிட்... இணையத்தில் வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன?

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சாம்பியன்ஸ் ட்ராபி... மேலும் பார்க்க

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் ... மேலும் பார்க்க

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் ... மேலும் பார்க்க

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ... மேலும் பார்க்க