செய்திகள் :

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

post image

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பாக தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் ரிஷப் பன்ட் கலந்துகொண்டிருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அந்த ஊடக நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் பண்ட், ``சிறு வயதிலிருந்தே, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என் ஒரே கனவாக இருந்தது. ஐ.பி.எல்லில் விளையாடுவது பற்றி நான் நினைத்தது கூட இல்லை. ஆனால், இன்று பெரும்பாலானோர் ஐ.பி.எல் மீது அதிக கவனம் செல்லுவதாக நான் நினைக்கிறேன்.

நிச்சயம் இது சிறந்த தளம்தான். இருப்பினும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது உங்களின் இலக்காக இருந்தால், ஐ.பி.எல் உட்பட அனைத்தும் அதில் வந்துவிடும் என்று நான் நம்புகிறேன். பெரிய கனவுகளை நீங்கள் கொண்டிருந்தால், வெற்றிகள் உங்களைத் தொடரும். ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் எப்போதும் நம்பினேன். 18 வயதில் அத்தகைய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது." என்று கூறினார்.

Rishabh Pant - LSG
Rishabh Pant - LSG

2022 டிசம்பரில் கார் விபத்துக்குள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ரிஷப் பண்ட், ஓராண்டுக்குப் பிறகு 2024-ல் ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுத்து அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடினார். மேலும், ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட், ஏலத்தில் லக்னோ அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாகவும் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் ... மேலும் பார்க்க

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ... மேலும் பார்க்க

Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெ... மேலும் பார்க்க

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க