செய்திகள் :

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

post image

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board). ஆனால், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பிசிசிஐ கூறிவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டது. அதுவும் ஒரே மைதானத்தில். அதனடிப்படையில், இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற்றது.

ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா

இறுதியில் இந்தியா கோப்பையையும் வென்றது. ஆனால், வென்ற அணிக்கு கோப்பை மற்றும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒரு நிர்வாகி ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அப்போதே கேள்வியெழுப்பியிருந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் தற்போது இதைப் பற்றி பேசியிருக்கிறார்.

`நாங்கள்தான் தொடரை நடத்தினோம். இருப்பினும்...’

ஊடக நிகழ்ச்சியொன்றில் பேசிய வாசிம் அக்ரம், ``பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இருப்பினும், PCB தலைமை இயக்க அதிகாரி சுமீர் அஹ்மத் சையத், PCB-க்கான சர்வதேச இயக்குநர் உஸ்மான் வஹ்லா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு வந்தனர். ஆனால், யாரும் அந்த நிகழ்ச்சி மேடையில் இல்லை. நாங்கள்தான் தொடரை நடத்தினோம். இருப்பினும், PCB-யை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர்கூட ஏன் மேடையில் இல்லை? அவர்கள் அழைக்கப்படவில்லையா? அது என்ன கதையென்று எனக்குத் தெரியவில்லை.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

ஆனால், அதைப் பார்க்கும்போது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. பாகிஸ்தானின் பிரதிநிதிகளில் ஒருவராவது அங்கு கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர் கோப்பையை வழங்குகிறாரா அல்லது பதக்கங்களை வழங்குகிறாரா என்பது முக்கியமல்ல." என்று கூறினார்.

2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோதும், கோப்பையை பிரதமர் மோடிதான் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம்பெறாதது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் ... மேலும் பார்க்க

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் ... மேலும் பார்க்க

Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெ... மேலும் பார்க்க

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

Rohit: ``மைதானத்தில் பேசுவது வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல..'' - ரோஹித் ஓப்பன் டாக்

சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி எ... மேலும் பார்க்க