செய்திகள் :

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

post image

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல்கள் இருந்துவந்தன. முன்னாள் ஆளுநர்கள் நஜீப் ஜங், அனில் பைஜால் மற்றும் தற்போதைய ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் மீது ஆம் ஆத்மி அரசு பல்வேறு புகார்களை அளித்திருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி, தில்லி நீர்வள ஆணையத்துக்கு நிதி, தில்லி கலவர வழக்குகளில் வழக்கறிஞர்கள் நியமனம், யமுனை ஆற்றில் மாசுபாடு குறித்த உயர்நிலைக் குழு ஆகிய விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசு, தில்லி ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், புதிய பாஜக அரசு, ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 ஆண்டுகளுக்குப்பிறகு தில்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

நடிகை செளந்தர்யா சென்ற விமானம் வெடித்தது விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மேலும், செளந்தர்யா விமானம் வெடித்த சம்பவத்தி... மேலும் பார்க்க