செய்திகள் :

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

post image

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார்.

ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாகவும் பால்டிக் மாநிலங்களில் ரஷிய படைகளின் ஆதிக்கத்தை சமாளிக்கவும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான பிரிட்டனின் படைகள் ’ஆப்ரேஷன் காப்ரிட்’ எனும் ராணுவ நடவடிக்கையின் கீழ் போலந்து மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் படைகளைச் சந்திக்க பிரிட்டன் ராஜ்ஜியத்தின் முடி இளவரசர் வில்லியம் இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் கென்சிங்டன் மாளிகை தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் மெர்சியன் பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகிக்கும் இளவரசர் வில்லியம் இந்த சந்திப்பில் நேட்டோவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்தும் பிரிட்டன் படைகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதையும் படிக்க: உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

இதனைத் தொடர்ந்து, அவர் ரஷியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த எஸ்தோனியாவின் தலைநகர் தாலினில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார் என்றும் ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த சந்திப்பானது ரஷியா - உக்ரைன் போருக்கு அமெரிக்க தலைமையிலான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்வைக்கப்படவுள்ளது.

மேலும், இம்மாத துவக்கத்தில் லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி பிரிட்டன் அரசர் சார்லஸை சந்தித்த பின்னர் இளவரசர் வில்லியமின் பயணமானது மேற்கொள்ளப்படவுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொர... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார். மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க