செய்திகள் :

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

post image

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்காக கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு பணியிலிருந்த பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் நாகேந்திர பட்டர் என்பவரிடம் கன்னடத்திற்குப் பதிலாக மராத்தியில் தனது சொத்து தொடர்பான ஆவணங்களைத் தருமாறு கூறியதுடன் அவரை மராத்தியில் பேசுமாறு திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க | ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு அலுவலரை அவர் திட்டும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் அந்த நபரை இன்று கைது செய்தனர்.

அதிகாரியை அவர் திட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது, அதைத் தொடர்ந்து பெலகாவி கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள், அதிகாரியை திட்டியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், "அரசு அதிகாரிகளுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்,

பெலகாவி பகுதியில் கடந்த மாதம் பயணி ஒருவரிடம் மராத்தியில் பதிலளிக்காததால் அரசுப் பேருந்தின் நடத்துனரைத் தாக்கியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க