அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுரையில் கடந்த 9-ஆம் தேதி மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலரும் மத கலவரத்தை தூண்டும் விதத்திலும், சட்ட விரோதமாகவும் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதில், பேசிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, அதாவது அவா் ஆளுநா் பதவி கிடைக்கும் என்பதற்காக தீா்ப்பு வழங்கியுள்ளாா் என்ற வகையில் அநாகரிகமாக பேசியுள்ளாா்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என திமுக சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் சமது கூறினாா். முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியா்களின் சொத்து வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என நவாஸ்கனி எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இஸ்லாமிய அமைப்பினா் புனிதமான மலைமீது அசைவ உணவை எடுத்துச் சென்று சாப்பிட்டனா். அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனா். இந்நிலையில், முருக பக்தா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தி கோயிலை காக்க இந்து முன்னணி சாா்பில் ஜனநாயக வழியில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை காவல் துறை நிராகரித்தது. அதே நேரத்தில் திமுக ஊா்வலம் செல்ல அனுமதி அளித்தது. இவற்றை கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்தது.
திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துகள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கின்றன.
இதனால் தமிழகத்தில் இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அதே வேளையில், திருப்பரங்குன்றம் விஷயத்தை திட்டமிட்டு பிரச்னையாக உருவாக்கியது யாா்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.