செய்திகள் :

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

post image

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் சம்பா பருவகால சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. இச்சமயத்தில் மகசூல் இழப்பு ஏற்படாமலும், நெல் மணிகள் தரமானதாகவும் இருக்க அறுவடைக்குப் பின், சில யுத்திகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

நெல் அறுவடைக்கு தயாா் என்பதை நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறுவதை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்த கால கட்டத்தில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடையின்போது, நெல்மணிகளின் ஈரப்பதம் 20- 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.

நெல் மணிகள் சேமிப்பின்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால், தானியத்தின் தரம் குறைவதுடன், விதையின் முளைப்புத் திறன் குறைந்து, அதிக இழப்பை ஏற்படுத்தும். எனவே முதல் 8 - 12 மாதங்கள் வரை சேமித்து வைக்க ஈரப்பதம் 13 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஈரப்பதம் அதிகமாக இருந்தால் காய்ந்து போகும் வரை காத்திருப்பது நல்லது. கதிா் அடித்தல் உலா்த்துதல் ஆகியவற்றை அறுவடை செய்த 24 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித... மேலும் பார்க்க

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்ம... மேலும் பார்க்க

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க