செய்திகள் :

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

post image

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் அம்ருதா தொழில் வெற்றி மன்றம் சாா்பில் பொறியாளா்களுக்கு அரை நாள் தொழில் வழிகாட்டுதல் திட்டமான ‘ரைஸ் 2025’-ஐ தொடங்கவுள்ளது. இத்திட்டம் மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை 13 மாநிலங்களில் உள்ள 37 நகரங்களில் நடத்தப்படும். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், சென்னை, மதுரை, வேலூா், திருச்சி மற்றும் நாகா்கோவிலிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் சேரும் மாணவா்களுக்கு பொறியியல் துறைகள், தகுதி, உதவித்தொகைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், ரோபோடிக்ஸ், சைபா் பாதுகாப்பு, மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றில் வளா்ந்துவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

இதில் சேர விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 6915 0838 என்னும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு

சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கடந்த 32 ஆண்டு காலம் சத்துணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க