செய்திகள் :

Ranya Rao: `உங்கள் வீட்டு வாசலை எட்டிவிட்டது' - புகைப்படத்தைப் பகிர்ந்து சித்தராமையாவைச் சாடும் பாஜக

post image

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டு தற்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவரை நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களுரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

ரன்யா ராவ்

இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் பேசிய நடிகை, ``நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்தும் என்னை தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விட மறுக்கிறார்கள்" என்றார். இந்த வழக்கு விசாரணை மார்ச் 24 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குத் தொடர்பிருப்பதாக கர்நாடக பா.ஜ.க தலைவர் அமித் மாளவியா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நடிகையுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``கர்நாடகாவில் ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு இப்போது முதல்வர் சித்தராமையாவின் வீட்டு வாசலை எட்டியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் தற்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவும் இடம்பெற்றுள்ளார். ஆனால், இதில் இருக்கும் அரசியல் தொடர்புகளை நிராகரிப்பவர் காங்கிரஸின் வருங்கால முதல்வர் டி.கே.சிவக்குமார் தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

dk shivakumar - டி.கே.சிவக்குமார்

இதற்கு முன்பே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ``தங்கக் கடத்தலில் எந்த அமைச்சரும் இதில் ஈடுபடவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது. இது எல்லாம் அரசியல் வதந்திகள். விசாரணை அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்படுவார்கள்." எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், ``விசாரணை அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கு விசாரிக்க அனைத்து சுதந்திரமும் உள்ளது. இதில் எங்கள் தரப்பில் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அதுவும் வெளியே வரட்டும். ஆனால் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம்: மாநில அரசைச் சேர்ந்த யாரும் எந்த வகையான சிறிய குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை." என்றார்.

சிதம்பரம்: `தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!’ - உயர் நீதிமன்றம் மறுத்த காரணமென்ன ?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் கோயிலுக்கு... மேலும் பார்க்க

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இத... மேலும் பார்க்க

கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?

'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில்... மேலும் பார்க்க

`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்... மேலும் பார்க்க

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலை... மேலும் பார்க்க

'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிபர்க... மேலும் பார்க்க