செய்திகள் :

'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்

post image

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு நாட்டு அதிபர்களின் பேச்சுவார்த்தையில் நின்றுபோன கனிம வளம் ஒப்பந்தம் கையெழுத்தாவது முடிவானது.

அடுத்ததாக, முக்கியமாக, இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கூறிய '30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு' உக்ரைன் ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு பேச்சுவார்த்தை நடத்த செல்ல உள்ளனர். இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, "ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவில் இருந்து அதிகாரிகள் செல்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். அப்படி நடந்தால் போரில் சிந்தப்படும் ரத்தங்களை 80 சதவிகிதம் தடுக்கலாம்.

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்!

புதினுடன் அடுத்து எப்போது பேசுவேன் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். ஒருவேளை, அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கும். நான் அமைதியை விரும்புகிறேன். அதனால், நான் இதை செய்யக் கூடாது என்று நினைக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

ஆனால், அமெரிக்கா உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகும், உக்ரைன் தங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது என்று ரஷ்யா வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டு குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்வாரா?!

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இத... மேலும் பார்க்க

கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?

'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில்... மேலும் பார்க்க

`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்... மேலும் பார்க்க

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலை... மேலும் பார்க்க

Ranya Rao: `உங்கள் வீட்டு வாசலை எட்டிவிட்டது' - புகைப்படத்தைப் பகிர்ந்து சித்தராமையாவைச் சாடும் பாஜக

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டு தற்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடைய... மேலும் பார்க்க

Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவருக்கு மம்தா பதிலடி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபேனர்ஜி, "பாரதிய ஜனதா கட்சிஅரசியல்ஆதாயத்துக்காக மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி, புண்படுத்துகிறது" என வெளிப்படையாகப்பேசியுள்ளார்.மேற்கு வங்க அரசின் இஸ்லாமியசட்டமன்ற உற... மேலும் பார்க்க