செய்திகள் :

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

post image

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பையாஜி ஜோஷி தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

இப்போது தென்னிந்தியாவில் மொழிப்பிரச்னை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர்டெல் சேவை மையத்திற்கு மராத்தி வாடிக்கையாளர் ஒருவர் சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம் மராத்தியில் பேசியிருக்கிறார்.

உடனே அந்த பெண் ஊழியர், பதிலுக்கு இந்தியில் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் அதற்கு மராத்தியில் பேசும்படி கேட்டுக்கொண்டார். உடனே அந்த பெண் ஊழியர், `மராத்தி எனக்கு முக்கியம் கிடையாது. நாம் இந்துஸ்தானில் வசிக்கிறோம். யாரும் எந்த மொழியும் பேசலாம். நான் ஏன் மராத்தி பேசவேண்டும். மகாராஷ்டிராவை நீங்கள் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமா. நான் எங்கு வேலை செய்யவேண்டும் எங்கு வேலை செய்யக்கூடாது என்று சொல்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

வாடிக்கையாளர் பதிலுக்கு, `நீங்கள் எனது பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அதோடு சரியாக பேசவும் இல்லை’ என்று கூறினார். பெண் ஊழியர் சத்தம் போட்டுள்ளார். எனினும் வாடிக்கையாளரின் குறையையும் தீர்த்து வைக்கவைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

`மராத்தி தெரிந்திருக்கவேண்டும்’

இருவரும் பேசியதை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் சித்ரா வாக் ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், ''ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால் அவர் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும். மராத்தி தெரிந்திருக்கவில்லையெனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். மராத்திக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஏர்டெல் கேலரியில் ஒரு பெண் ஊழியர் "ஆணவமும் முரட்டுத்தனமும்" காட்டி இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உங்கள் கேலரிகளில் உள்ள ஒவ்வொரு மேலாளரும் பணியாளரும் மராத்தியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆட்சேர்ப்பின் போது மராத்தி மொழி சரளமாகத் தெரிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் அனுப்பிய செய்தியில் கூறினார். இதனிடையே, நடந்த நம்பவம் துரதிஷ்டவசமானது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

Budget 2025- 26: 'எல்லார்க்கும் எல்லாமும்' - தமிழக பட்ஜெட்டின் இலச்சினையை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட்டின் இலச்சியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டிற்கான முதல்... மேலும் பார்க்க

சிதம்பரம்: `தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!’ - உயர் நீதிமன்றம் மறுத்த காரணமென்ன ?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் கோயிலுக்கு... மேலும் பார்க்க

கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?

'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில்... மேலும் பார்க்க

`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்... மேலும் பார்க்க

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலை... மேலும் பார்க்க