செய்திகள் :

கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?

post image

'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது, ``தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சங்-பரிவார் மேலும் பரப்புகிறது" எனப் பேசினார். இந்தக் கருத்தை எதிர்த்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்திக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துஷர் காந்தி

அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. துஷர் காந்தி தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தன் கருத்தை பின்வாங்க மறுத்து, அதில் உறுதியாக இருந்த துஷர் காந்தி, ``காந்தி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் ஒழிக" என முழங்கினார். தொடர்ந்து விடாமல் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி துஷர் காந்தியின் காரை மறித்தனர்.

தன் கருத்தில் பிடிவாதமாக இருந்த துஷர் காந்தி, கோஷம் எழுப்பிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால், அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர் கே.சுதாகரன், பா.ஜ.க, ஆர்,எஸ்.எஸ்-சை கடுமையாக விமர்சித்திருந்தார். ``இந்தக் கூட்டம் (நாதுராம்) கோட்சேவின் பேயால் வேட்டையாடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த சி.பி.எம்-ன் மௌனம் சந்தேகத்தை எழுப்புகிறது" என்றார்.

தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

Budget 2025- 26: 'எல்லார்க்கும் எல்லாமும்' - தமிழக பட்ஜெட்டின் இலச்சினையை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட்டின் இலச்சியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டிற்கான முதல்... மேலும் பார்க்க

சிதம்பரம்: `தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!’ - உயர் நீதிமன்றம் மறுத்த காரணமென்ன ?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் கோயிலுக்கு... மேலும் பார்க்க

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இத... மேலும் பார்க்க

`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்... மேலும் பார்க்க

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலை... மேலும் பார்க்க