செய்திகள் :

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

post image

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஏழு மாதங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்கள் கடித்து இறந்துள்ளன. நாய்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் சரியாக கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், தலைமைச் செயலாளா் பேரிடா் நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமைச்சா் சாமிநாதன் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, பேரிடா் நிவாரண இழப்பீடாக கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ. 4 ஆயிரம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சரியான இழப்பீடு அல்ல. எனவே இதனை மறுஆய்வு செய்து தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் அனுப்பியுள்ள கடிதத்தை திரும்பப் பெற்று, இறந்த ஆடு, கோழிகளுக்கு அதன் எடை அடிப்படையில் கிலோவுக்கு ரூ.500-ஐ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்ம... மேலும் பார்க்க

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:... மேலும் பார்க்க