செய்திகள் :

விராலிமலை பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டு: சம்பிரதாயமாக கோயில் காளை அவிழ்க்கப்பட்டது

post image

விராலிமலை: விராலிமலை பட்டமரத்தான் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் நிலையில், நிகழாண்டு வாடிவாசல் அருகே உள்ள திடலில் அதிக அளவு நீர் தேங்கி உள்ளதால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து தொடர் நிகழ்வை கைவிடமுடியாத சூழலால் வியாழக்கிழமை சம்பிரதாயமாக வாடிவாசலில் கோயில் காளை மட்டும் அவிழ்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாாவட்டம், விராலிமலை பட்டமரத்தான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 29 ஆம் தேதி திருவிழா நடத்தப்பட்டு கோயில் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும்.

அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை

இந்த நிலையில், நிகழாண்டு அண்மையில் பெய்த மழையால் கோயில் குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் வாடிவாசலில் அவிழ்க்கப்படும் காளைகள் பாய்ந்து செல்வதற்கு வழி இல்ததாலும், காளை மற்றும் பார்வையார்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு நிகழாண்டு போட்டி குறிப்பிட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் ஆண்டுதோறும் தோறும் நடக்கும் தொடர் நிகழ்வு என்பதால் சம்பிரதாயமாக கோயில் காளை மட்டும் அவிழ்க்க கமிட்டியாளர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை அவிழ்க்கப்பட்டது.

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட காளையை கொட்டடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு காளை அவிழ்க்கப்பட்டது. சம்பிரதாய ஜல்லிக்கட்டு மற்றும் கோயில் காளை என்பதால் காளைகளை தழுவ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம்ஜெயின்கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது. பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்... மேலும் பார்க்க

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் ... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி... மேலும் பார்க்க

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(... மேலும் பார்க்க

காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்... மேலும் பார்க்க

தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்ட... மேலும் பார்க்க