செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங...
ரேவந்த் ரெட்டியுடன் திமுக தலைவர்கள் சந்திப்பு!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க : கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பொன்முடி சந்திப்பு!
இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தில்லியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம், முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்கிறேன், கட்சி மேலிட அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.