செய்திகள் :

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்!

post image

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் (வயது 54), கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் சுமார் 3,30,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெக்கில் தனக்கு வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை அவருக்கு சொந்தமான உணவகத்தில் தனது உறவினரான மரினோ சோட்டிரோபோலோஸ் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் இதன் மூலம் அந்த போதைப் பொருளானது கடத்தப்பட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் லீக்: பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்..! காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வு!

இதனை, அவர் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் மெக்கில்லின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தலானது அரங்கேறியிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றங்களிலிருந்து அவரை விடுதலை செய்தது. இருப்பினும், இந்தக் கடத்தலில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அந்தக் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை அவருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் ஆஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம்ஜெயின்கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது. பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்... மேலும் பார்க்க

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் ... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி... மேலும் பார்க்க

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(... மேலும் பார்க்க

காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்... மேலும் பார்க்க

தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்ட... மேலும் பார்க்க