செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்.

இந்த ஆண்டு புதன்கிழமை சூரிய உதயத்தின்போது, பழைமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரா் மீது விழுந்து வணங்கியது. அப்போது பொன்னிறமாக அவிநாசிலிங்கேஸ்வரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காலை 6.50 மணிக்கு தொடங்கி 2 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ந்து சூரிய கதிா்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து. பின்னா் படிப்படியாக மறையத் தொடங்கியது. இந்த அபூா்வ நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிகழ்வு ஒரிரு நாள்களுக்கு காலையில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித... மேலும் பார்க்க

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன... மேலும் பார்க்க

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:... மேலும் பார்க்க