செய்திகள் :

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், ஐடி, டெக், டெலிகாம், ரியால்ட்டி, மீடியா, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் இறுதியில் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 1.63 லட்சம் கோடிவீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 168.49 புள்ளிகள் கூடுதலுடன் 74,270.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,392.15 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 73,598.16 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 72.56 புள்ளிகள் (0.10 சதவீதம்) இழப்புடன் 74,029.76-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,122 பங்குகளில் 1,494 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,491 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 137 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், டாடாமோட்டாா்ஸ், கோட்டக்பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.45 புள்ளிகள் கூடுதலுடன் 22,536.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,577.40 வரை மேலே சென்றது. பின்னா், 22,329.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 27.40 புள்ளிகள் (0.12 சதவீதம்) இழப்புடன் 22,470.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்... மேலும் பார்க்க