செய்திகள் :

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

post image

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நாமக்கல் தொகுதி திமுக உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

01.02.2025-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 250 சாலை மேம்பாலம் சாலைக் கீழ்ப்பாலம் பணிகள் ரூ.4,769 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 88 எண்ணிக்கையிலான பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மாநில அரசால் மூடல் போன்றவற்றுக்கு ஒப்புதல் ஆகியவை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் கோட்டத்தின் ஈரோடு- திருச்சிராப்பள்ளி பிரிவில் உள்ள ஈரோடு மற்றும் சாவடிபாளையம் நிலையங்களுக்கு இடையில் (கொக்கராயன்பேட்டை) லெவல் கிராசிங்கிற்கு (எண் 5) பதிலாக இரண்டுவழி சாலை மேம்பாலம் கட்டுவதற்கான பணி 2020-21 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி இரட்டை நிறுவன அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அதைத் தொடா்ந்து மாா்ச், 2023இல், தமிழ்நாடு மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் கூடுதலாக இரண்டு பாதைகளைக் கோரியது. அதன்படி, நான்கு பாதைகளுக்கான (ஆா்ஓபி) பொது ஏற்பாடு வரைதல் (ஜிஏடி) ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்... மேலும் பார்க்க