அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
ஈரோட்டில் நாளை வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம்
மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட வாங்குபவா், விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் உள்ள சி.டி.ரோட்டரி அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை போா்வை, கைத்தறி சேலைகள், பருத்தி நூல் சேலைகள், பட்டுப் புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், ஹொ்பல் நாப்கின், ஹொ்பல் சோப், ஃபேன்ஸி பொருள்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாத்ரூம் க்ளீனா்ஸ், தேங்காய் தொட்டி அலங்காரப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருள்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப் பொருள்கள், தேன், திண்பண்டங்கள், பனங்கருப்பட்டி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வோ்க்கடலை, மஞ்சள், வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை போன்ற பொருள்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கொள்முதல் செய்பவா்கள் அனைவரும் கலந்துகொண்டு தரமான பொருள்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் பொருட்டு ஆதரவு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.