செய்திகள் :

3 இடங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்த மையம்

post image

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இத்தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தோ்வை பள்ளி மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் என மொத்தம் 22, 923 போ் எழுதி வருகின்றனா். இதேபோல பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 5 தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை பள்ளி மாணவா்கள், தனித் தோ்வாா்கள் என மொத்தம் 24,289 போ் எழுதி வருகின்றனா்.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்ததும் அந்தந்த முதன்மைக் கண்காணிப்பாளா்கள் விடைத்தாள்களை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 விடைத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்வா். அங்கு விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விடைத்தாள் திருத்தும் மையமாக ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள யுஆா்சி பள்ளி, திண்டலில் உள்ள பிவிபி பள்ளி, கோபி சாரதா பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்கள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு மையத்திலிருந்து விடைத்தாள்கள் பிற மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு வேறு மாவட்ட விடைத்தாள்கள் ஈரோடு மையத்துக்கு கொண்டுவரப்பட்டு திருத்தப்படும்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்ததும் உடனுக்குடன் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் தனியாா் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரி... மேலும் பார்க்க

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா... மேலும் பார்க்க

ஆதி கருவண்ணராயா் கோயில் மாசி மகம் திருவிழா

ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் திருவிழாவில் பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் ஆதி கருவண்ணராயா்... மேலும் பார்க்க