செய்திகள் :

இனி மாட்டுப்பாலுக்கு பதிலாக கரப்பான்பூச்சிப் பாலா? - என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

post image

லைப்பைப் படித்தவுடன் அருவருப்பாக இருந்தாலும், டிப்லாப்டெரா பவுன்டேட் (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப்பாலில், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிகமான சத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பசிபிக் வண்டான டிப்லாப்டெரா பவுன்டேட் கரப்பான் பூச்சி இனத்தைச் சேர்ந்தது. அதன் குஞ்சுகளுக்கு உணவளிக்க ஊட்டச்சத்து நிறைந்த பால் போன்ற பொருளை உற்பத்தி செய்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாலில் அனைத்து அத்தியாவசியமான அமினோ ஆசிட்கள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் நிரம்பிய புரதங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இது பசுவின் பாலைவிட நான்கு மடங்கு அதிக ஊட்டச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கரப்பான் பூச்சி இனத்தைச் சேர்ந்த பசுபிக் வண்டு

இதுவரைக்கும் இலை, பெர்ரி, நட்ஸ், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்குத்தான் ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் ஃபுட் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது இந்த பசிபிக் வண்டின் பாலும் இடம்பெற தகுதியானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக இது காணப்படுகிறது. 2016-ம் ஆண்டு Journal of the International Union of Crystallography வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் எருமை பாலைவிட கரப்பான் பூச்சியின் பால் அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஓர் உணவு என்று சொல்லியிருந்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தகுந்தது.

பெரும்பாலான கரப்பான் பூச்சி இனங்கள் போலல்லாமல், பசிபிக் வண்டு முட்டையிடாது. மாறாக, இளம் புழுக்களை ஈனும். இளமையாக வாழப் பிறக்கிறது. அதன் கருக்களை வளர்க்க, தாய் தனது அடைகாக்கும் பைக்குள் வெளிர் மஞ்சள் நிறத்தில் பால் போன்ற திரவத்தை சுரக்கிறது. இந்த திரவமானது இளம் பூச்சியின் வயிற்றில் படிகங்களை உருவாக்குகிறது. இதுவே கரப்பான் பூச்சிப் பால் உருவாக காரணமாக இருக்கிறது.

கரப்பான் பூச்சி இனத்தைச் சேர்ந்த பசுபிக் வண்டு

அதிக புரதச்சத்து நிறைந்த இன்னொரு பால் கிடைத்துவிட்டது என்று நாம் மகிழ்ந்துவிட முடியாது. இன்னும் இது உண்ணத்தகுந்த உணவு என்று ஆராய்ச்சியாளர்கள் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. இதில் அதிக புரதம் உள்ளது என்பது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிப்பால் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதன் திறனை புறக்கணிக்க முடியாது. விஞ்ஞானிகள் அதன் பயன்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். எல்லா சூப்பர் ஃபுட்ஸை போலவே, கரப்பான் பூச்சிப்பால் சந்தைக்கு வரும்போது சமச்சீர் உணவுக்கு துணையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

1988-ல் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் - தற்போதைய மதிப்பு இத்தனை லட்சமா?

சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது 1988ல் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறித்த ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளார்.கார் ஆர்வலரான இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் ப... மேலும் பார்க்க

கர்நாடகா: 'கம்பாலா' திருவிழா... சேறும் சகதியுமான நெல் வயல் பாதையில் சீறி பாய்ந்த எருமைகள்! | Album

கம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா ... மேலும் பார்க்க

`யார் இந்த தண்ணீரை குடிப்பார்கள்?'- கும்பமேளாவிலிருந்து கொண்டுவந்த நீரை குடிக்க மறுத்த ராஜ் தாக்கரே!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் 45 நாள்கள் நடந்த கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கும்பமேளாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தவறவில்ல... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `இளையராஜா சிம்பொனி டு ஆஸ்கர் விருதுகள்' - இந்த வார ஆட்டத்துக்கு ரெடியா!?

இளையராஜா சிம்பொனி, ஆஸ்கர் விருதுகள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள... மேலும் பார்க்க

வீட்டினுள் மனைவிக்கு ஏசியுடன் சமாதி; மறைவுக்குப் பிறகும் காதலை வெளிப்படுத்து அன்பான கணவர்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார்.கான்கிரட்... மேலும் பார்க்க

Baba Kalyani: தாய்க்குச் சமாதி கட்டுவது யார்? சகோதரியை எதிர்த்து நீதிமன்றம் போன பாபா கல்யாணி

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாபா கல்யாணி. கல்யாணி குரூப் ஆப் கம்பெனிகளின் உரிமையாளரான பாபா கல்யாணி தனது பெற்றோர் இறந்த பிறகுச் சொத்தைப் பிரித்துக்கொள்வதில் தனது சகோதரி சுகந்தாவுடன் பிரச்னை ஏ... மேலும் பார்க்க