செய்திகள் :

வீட்டினுள் மனைவிக்கு ஏசியுடன் சமாதி; மறைவுக்குப் பிறகும் காதலை வெளிப்படுத்து அன்பான கணவர்!

post image

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார்.

கான்கிரட் தொழிலாளரான பழனி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் அவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், வீட்டின் உள்ளே இறந்த மனைவிக்கென ஒரு இடம் ஒதுக்கி சமாதி எழுப்பி அதைப் படுக்கையறை போல் வடிவமைத்துள்ளார் பழனி.

அவரது மனைவிக்கு வீடு குளுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதனால் அவருக்கென ஏசியும் போட்டுள்ளார். வீட்டிற்கு யார் வந்தாலும் ஹாலில் நின்று பேச வேண்டும் என்று பழனி கூறுவாராம். அப்போதுதான் மற்றவர்கள் பேசும் சத்தம் அவரது மனைவிக்குக் கேட்கும் என்பதால் இவ்வாறு செய்யச் சொல்வாராம்.

"கடந்த 30 ஆண்டுகளாக எனக்காக உறுதுணையாக நின்றவர் என் மனைவி, யார் வீட்டிற்கு வந்தாலும் முதலில் உணவு அளித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவருக்கு ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம். தான் கோபமாக இருந்தால் கூட பொறுமையாக எடுத்துக் கூறி எனக்குப் புரியவைப்பார்" என்று பழனி உணர்ச்சிப் பொங்கக் கூறியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikatan Weekly Quiz: `இளையராஜா சிம்பொனி டு ஆஸ்கர் விருதுகள்' - இந்த வார ஆட்டத்துக்கு ரெடியா!?

இளையராஜா சிம்பொனி, ஆஸ்கர் விருதுகள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள... மேலும் பார்க்க

Baba Kalyani: தாய்க்குச் சமாதி கட்டுவது யார்? சகோதரியை எதிர்த்து நீதிமன்றம் போன பாபா கல்யாணி

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாபா கல்யாணி. கல்யாணி குரூப் ஆப் கம்பெனிகளின் உரிமையாளரான பாபா கல்யாணி தனது பெற்றோர் இறந்த பிறகுச் சொத்தைப் பிரித்துக்கொள்வதில் தனது சகோதரி சுகந்தாவுடன் பிரச்னை ஏ... மேலும் பார்க்க

கோமாவிலிருப்பதாகக் கூறி பணம் வாங்கிய மருத்துவமனை; சுவாச கருவியோடு வெளியே வந்த நோயாளி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் நோயாளி ஒருவரைப் படுக்கையில் கை, கால்களைக் கட்டி கோமா நிலையில் இருப்பதாகக் கூறி உறவினர்களிடம் பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லம் ஜி.டி... மேலும் பார்க்க

Chennai Pen Show: வித்தியாசமான டிசைன்களில் பேனா கலெக்‌ஷன்கள்; கண்கவரும் கண்காட்சி! | Photo Album

நியூஸ் பேப்பரில் செய்த அசத்தல் pen stand! #KidsTalentCorner Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடுகடத்தல் : மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் மனு அமெரிக்காவில் தள்ளுபடி

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக படகில் வந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இரவோடு இரவாக நடந்த இத்தாக்குதல் இரண்டு நாட்களுக்கும் மேல் நீடித்தது. உலகம் முழு... மேலும் பார்க்க

புனே: "தாலி, குங்குமம் தேவையில்லையெனில் கணவன் மட்டும் எதற்கு?" - நீதிபதி கேள்வி; வழக்கறிஞர் ஆதங்கம்

குடும்பப் பிரச்னையில் கணவனைப் பிரிந்திருக்கும் பெண் தனது கணவன் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணின் வழக்கு புனே செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பெ... மேலும் பார்க்க