செய்திகள் :

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

post image

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில்லி அரசு சார்பில் கெளரவிக்கப்பட்டனர். முதல்வர் ரேகா குப்தாவும் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் விருது வழங்கினர்.

ஜம்மு - காஷ்மீரின் முதல் பெண் கார் ரேஸர் ஹுமாரியா முஷ்டேக், மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், குடும்ப வன்முறையில் இருந்து மீண்டுவந்த ஸ்வீட்டி மேத்தா, குடும்பப் பிரச்னையில் சிக்கிய பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் ரேகா ஜிந்தால், குடிசைப் பகுதிகளில் கணினி கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டு வரும் நளினி, மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை கஞ்சன் லக்கானி, சமூக சேவகர் நீது செளத்ரி உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெண்களின் இருசக்கர வாகனப் பேரணியும் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ரேகா குப்தா கல்லூரிப் பருவ காலங்களில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்..

பெண்களில் இருசக்கர வாகனப் பேரணி, அவர்களின் வலுவை வெளிப்படுத்துவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளரந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சில பகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உழைப்பே அதிகம் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க