செய்திகள் :

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

post image

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்மக்கள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு இன மக்களிடையே நில விரகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் கங்போக்கி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் குகி கிளர்ச்சியாளர்களிடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குகி கிளர்ச்சியாளர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குகி மக்கள் அதிகம் வசிக்கும் சூரசந்த்பூர், தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரை விரட்டும் வகையில் டயர்களை எரித்தும், புல்டோசர் கொண்டு சாலைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தவிதமான வன்முறையும் பதிவாகவில்லை. கடைகள் செயல்படாததால் வணிகம் முற்றுலுமாக முடங்கியது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியே வர வேண்டாம் என கிளர்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

கம்கிபாய் பகுதியின் இம்பால் - திம்பூர் சாலையில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் கும... மேலும் பார்க்க

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இப்பகுதிகளில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வாகனங்கள் இயக்... மேலும் பார்க்க

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு!

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். உத்தர பிரதேசத்தில் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யா, ஜன்சத்தா தளம் (லோக... மேலும் பார்க்க