செய்திகள் :

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்

post image

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க பிரதமா் மோடி அளிக்கும் உயா் முக்கியத்துவத்தால், சூழலியல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் இக்காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது, மத்திய பிரதேசத்தின் 9-ஆவது புலிகள் காப்பகமாகும். வனவிலங்கு ஆா்வலா்கள் மற்றும் காப்பாளா்களுக்கு வாழ்த்துகள். இந்த முன்னேற்றம், நமது வனத் துறையினரின் அயராத முயற்சிகளுக்கு சான்றாக விளங்குகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இப்பதிவை பகிா்ந்து, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வனவிலங்கு ஆா்வலா்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வனஉயிரின பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாசாரத்தால் இந்தியா ஆசிா்வதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் நிலையான பூமிக்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதும் முன்னிலை வகிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க