செய்திகள் :

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இப்பகுதிகளில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குகி போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையிருக்கும் இடையே சனிக்கிழமை மோதல் நிகழ்ந்த காங்போக்பி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த வன்முறையும் நிகழவில்லை. அதேநேரம், அங்கு பதற்றம் முழுமையாக தணியவில்லை.

காங்போக்பி, சுராசந்த்பூா், தேங்நெளபால் ஆகிய மாவட்டங்களில் சாலையின் குறுக்கே கற்களை வைத்தும், டயா்களை எரித்தும், மரங்களை வெட்டி வீசியும் ஏற்படுத்தப்பட்ட தடைகளை அகற்றும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். அமைதியை பராமரிக்க தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி-ஜோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 8) முதல் தடையற்ற வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் குகி-ஜோ பழங்குடியின அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு போராட்டக்காரா் உயிரிழந்தாா். பெண்கள், காவல் துறையினா் உள்பட 40 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தை குகி-ஜோ அமைப்பினா் தொடங்கினா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த மாதம் விலகியதைத் தொடா்ந்து, புதிய முதல்வரை தோ்வு செய்வதில் அக்கட்சி எம்எல்ஏக்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க