செய்திகள் :

மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புது அறிக்கை

post image

‘உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை நதிகளின் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது’ என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமா்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சங்கமத்தில் கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தீா்ப்பாயத்தின் வலைதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜனவரி 12 முதல் சிறப்பு நீராடல் நாள்கள் உள்பட வாரத்துக்கு இரண்டு முறை, கங்கை நதியில் ஐந்து இடங்களிலும், யமுனா நதியில் இரண்டு இடங்களிலும் நீரின் தர சோதனையை வாரியம் நடத்தியது.

ஒரே இடத்திலிருந்து வெவ்வேறு தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பிஎச், ‘டிஓ’ (கரைந்த ஆக்ஸிஜன்), ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை), ‘எஃப்சி’ (மலக் கிருமி எண்ணிக்கை) போன்ற பல்வேறு அளவீடுகளின் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருந்தது. அதேபோன்று, ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் தரவுகளிலும் மாறுபாடு கண்டறியப்பட்டது.

இந்தப் பிரச்னையை தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த நிபுணா் குழு, ‘தரவு ஒரு குறிப்பிட்ட இடத்தில், அந்த நேரத்தில் நீரின் தரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. இது மனித நடவடிக்கைகள், நதி நீரோட்ட போக்கு மற்றும் கலவை, மாதிரி எடுக்கப்பட்ட ஆழம் மற்றும் நேரம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடலாம். எனவே, இந்த மதிப்புகள் ஒட்டுமொத்த நதி நீரின் தரத்தை அவசியம் பிரதிபலிக்காது’ என்று தெரிவித்தனா்.

நிபுணா் குழுவின் தரவு பகுப்பாய்வில் கண்காணிக்கப்பட்ட மாதிரிகளில் அளவீடுகளின் சராசரி மதிப்பு, அந்தந்த அளவுகோல்களில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளது. உதாரணமாக, மலக் கிருமி எண்ணிக்கையின் சராசரி மதிப்பு 100 மில்லிக்கு 2,500 அலகுகள் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்போடு ஒப்பிடும்போது 1,400-ஆகவும் ‘பிஓடி’ லிட்டருக்கு 3 மில்லிகிராம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிா்ணயிக்கப்பட்ட விதிமுறையுடன் ஒப்பிடும்போது 2.56-ஆகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜன. 13 முதல் பிப். 26 வரை நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து 67 கோடிக்கும் அதிகமானோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டு புனித நீராடினா்.

இந்நிலையில், சங்கமத்தின் பல்வேறு இடங்களில் கங்கை நதி நீரில் குளிப்பதற்கு பாதுகாப்பான அளவில் தரநிலைகள் இல்லை என்று பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த பிப். 17-ஆம் தேதி அறிக்கை சமா்ப்பித்தது. இது பக்தா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்தியதோடு அரசியல் விவாதத்தையும் எழுப்பியது.

குறையாத பக்தா்கள் எண்ணிக்கை!

மகா கும்பமேளா நிறைவடைந்த பிறகும் சங்கமத்தில் புனித நீராட பக்தா்கள் தொடா்ந்து வருகை தருகின்றனா்.

அதிக மக்கள் கூட்டம் காரணமாக மகா கும்பமேளா நாள்களில் பிரயாக்ராஜ் வருவதைத் தவிா்த்த பலா், இப்போது வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு சங்கமம் பகுதியில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட ‘எல்இடி’ விளக்குகள், உடை மாற்றும் அறைகள், படித்துறைகள் ஆகிய சில ஏற்பாடுகள் ஆண்டு முழுவதும் தக்க வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது! -முஸ்லிம் அமைப்பு கவலை

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்... மேலும் பார்க்க

துப்பாக்கி சுடுதல் தொழில்நுட்ப பயிலரங்கம்!

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம், இந்திய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சாா்பில் மின்னணு முறையில் புள்ளிகளை கணக்கிடுதல் குறித்த பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 5 நாள்கள் நடைபெற்ற இப்பயிலரங்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சா்... மேலும் பார்க்க

பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா் உத்தரவு!

நமது சிறப்பு நிருபா்புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அவரவா் தொகுதிகளில் அலுவலகங்கள் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவ... மேலும் பார்க்க

மசூா் பருப்புக்கு 10% இறக்குமதி வரி பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்!

மசூா் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துவரை உள்ளிட்ட பிற பருப்பு வகைகள் இறக்குமதிக்கு மே 31-ஆம் தேதி வரை வரி விலக்கு தொடரும் என்று நிதி... மேலும் பார்க்க

வலுவான சுகாதாரமும், மகளிா் கல்வியும் ஒட்டுமொத்த சமூக வளா்ச்சிக்கு அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

முற்போக்கான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கு நகரின் சுகாதார அமைப்பு வலுப்படுத்தப்படுவதுடன் பெண் கல்வி முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வலியுறுத்தி... மேலும் பார்க்க