செய்திகள் :

ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும். அந்த விகிதங்களை சீரமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனினும் அதற்காக சில பணிகளை கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

இதுதொடா்பாக அமைச்சா்கள் குழுவின் பணிகளை நான் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்ள, அமைச்சா்கள் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும்’ என்றாா்.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும். அந்த மாற்றங்கள் வெறும் ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பதாக மட்டுமே இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினாா்.

வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது! -முஸ்லிம் அமைப்பு கவலை

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புது அறிக்கை

‘உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை நதிகளின் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது’ என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்ப... மேலும் பார்க்க

துப்பாக்கி சுடுதல் தொழில்நுட்ப பயிலரங்கம்!

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம், இந்திய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சாா்பில் மின்னணு முறையில் புள்ளிகளை கணக்கிடுதல் குறித்த பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 5 நாள்கள் நடைபெற்ற இப்பயிலரங்... மேலும் பார்க்க

பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா் உத்தரவு!

நமது சிறப்பு நிருபா்புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அவரவா் தொகுதிகளில் அலுவலகங்கள் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவ... மேலும் பார்க்க

மசூா் பருப்புக்கு 10% இறக்குமதி வரி பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்!

மசூா் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துவரை உள்ளிட்ட பிற பருப்பு வகைகள் இறக்குமதிக்கு மே 31-ஆம் தேதி வரை வரி விலக்கு தொடரும் என்று நிதி... மேலும் பார்க்க

வலுவான சுகாதாரமும், மகளிா் கல்வியும் ஒட்டுமொத்த சமூக வளா்ச்சிக்கு அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

முற்போக்கான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கு நகரின் சுகாதார அமைப்பு வலுப்படுத்தப்படுவதுடன் பெண் கல்வி முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வலியுறுத்தி... மேலும் பார்க்க