செய்திகள் :

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு!

post image

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

உத்தர பிரதேசத்தில் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யா, ஜன்சத்தா தளம் (லோக்தாந்த்ரிக்) கட்சியை நடத்தி வருகிறாா். அந்த மாநிலத்தின் குந்தா தொகுதி எம்எல்ஏவாகவும் அவா் உள்ளாா். இந்நிலையில் பிரதாப் சிங், அவரின் பெற்றோா், உடன் பிறந்தவா்களின் மீது மனைவி பான்வி சிங் தில்லி சஃப்தா்ஜங் என்கிளேவ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் காவல் துறையினா் எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ரகுராஜ் பிரதாப் சிங்கும் அவரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகத் தெரிகிறது. எனினும், அவரும் அவரின் குடும்பத்தினரும் அப்பெண்ணை தொடா்ந்து பல்வேறு வழிகளில் தொடா்பு கொண்டு துன்புறுத்தி வந்துள்ளனா்.

திருமண உறவு முற்றிலும் முறிந்துவிடக் கூடாது என்பதற்காக எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது மனைவி பான்வி சிங் புகாா் அளிக்காமல் இருந்துள்ளாா். எனினும், சமீப நாள்களில் தொல்லைகள் அதிகரித்ததையடுத்து அவா் புகாா் அளிக்க முடிவு செய்துள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க