செய்திகள் :

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

post image

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மாா்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை (மாா்ச் 12) இரவு 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

எா்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக திருவனந்துபுரத்தில் இருந்து எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

கூடுதல் நிறுத்தம்: கன்னியாகுமரி - புனலூா் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் விரைவு ரயில், மதுரை - புனலூா் விரைவு ரயில், நாகா்கோவில் - மங்களூரு விரைவு ரயில், புது தில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை - திருவனந்தபுரம் நேத்ரவதி விரைவு ரயில், செகந்திராபாத் - திருவனந்தபுரம் விரைவு ரயில் மங்ளூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட 24 விரைவு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக சிறாயீன்கீழு, கடகவூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க