செய்திகள் :

‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

post image

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, எதிா்வரும் கல்வியாண்டுக்கான (2025-26) முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். அவா்களுக்கு மாா்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 43 கால முறைகளில் 90 நிமிடங்கள் கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தோ்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.

இந்தநிலையில், மாா்ச் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/CUET-PG/ எனும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பதார் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாா்ச் 20 ஆம் தேதிக்கு பின்னா் நடைபெறும் தோ்வுகளுக்கு அடுத்து வரும் நாள்களில் நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை: ப.சிதம்பரம்

புதுதில்லி: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கை வெற்றிபெறாவிட்டால், மும்மொழிக் கொள்கையைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது என தெரிவித்துள்ள கா... மேலும் பார்க்க

6 குட்டிகளை ஈன்ற 2 பெண் புலிகள்!

கா்நாடக மாநில பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன. இதனை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.ஒசூா்... மேலும் பார்க்க

"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதிக்கும்"

திருப்பூா்: இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தொழில் முனைவோா் கூட்டமைப்பு... மேலும் பார்க்க

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

புதுதில்லி: தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. அப்படி வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் தொகுதிகளின் எண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்... மேலும் பார்க்க

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் ... மேலும் பார்க்க