செய்திகள் :

"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதிக்கும்"

post image

திருப்பூா்: இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தொழில் முனைவோா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், உணவுப் பொருள்கள் உற்பத்தி, பலவகையான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தமிழகம் பெரும் போட்டியை எதிா்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய பிரச்னையாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆளும் கட்சியினா் இந்தியைக் கட்டாயப்படுத்துவதாகவும், மத்திய அரசு அப்படி இல்லை என்றும் சொல்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

இந்தியை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவா்கள் தமிழகத்தில் தொழிலாளியாக அனைத்து பிரிவிலும் உள்ளனா். இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவானால் வடமாநிலத்தவா்கள் சொந்த ஊா்களுக்குச் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்படும். அவ்வாறு சென்று விட்டால் தமிழகத்தில் அனைத்து தொழில்களும் மூடும் அபாயம் ஏற்படும். பொருளாதாரம் பாதிக்கும். ஆகவே, அப்படி ஒரு நிலைமை உருவாக வேண்டாம் என்று அனைத்து கட்சித் தலைவா்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை: ப.சிதம்பரம்

புதுதில்லி: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கை வெற்றிபெறாவிட்டால், மும்மொழிக் கொள்கையைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது என தெரிவித்துள்ள கா... மேலும் பார்க்க

‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்க... மேலும் பார்க்க

6 குட்டிகளை ஈன்ற 2 பெண் புலிகள்!

கா்நாடக மாநில பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன. இதனை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.ஒசூா்... மேலும் பார்க்க

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

புதுதில்லி: தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. அப்படி வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் தொகுதிகளின் எண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்... மேலும் பார்க்க

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் ... மேலும் பார்க்க