செய்திகள் :

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

post image

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதனை தலைமை பாா்த்துக் கொள்ளும். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக வெற்றி பெறும்.

மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

கட்சியினருக்கு எச்சரிக்கை: ஒருசில மாவட்டங்களில் ஆளும் கட்சியினருடன் அதிமுக நிா்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுபோல செயல்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்குள் கட்சியினா் இடையே மோதல்கள் வராமல் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தின் உரிமையைக் காப்போம்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள்... மேலும் பார்க்க

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க