செய்திகள் :

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

post image

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அப்போது அவருக்கு தேமுதிக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மிக முக்கியமான மூன்று பிரச்னை என்றால் மும்மொழி கொள்கை, தொகுதி சீரமைப்பு, மீனவர்கள் பிரச்னை. இந்த காலகட்டத்தில் இது மூன்றுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழ் மொழிதான் நம் தாய்மொழி, உயிர்மொழி. நமது தாய்மொழி தமிழக முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ்ப் படிக்கணும் அதுதான் தேமுதிக நிலைப்பாடு.

அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்தின் வார்த்தை அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதியில் குறைப்பதாக கருத்து இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப்பற்றி நான் பேசுவதற்கு எதுவும் இல்லை.

தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மிகவும் மன வேதனையாக இதை பதிவு செய்கிறேன்.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். நாம் அதனை விட்டுக் கொடுத்ததில் இருந்துதான் மீனவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்யனும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

பொறுத்திருங்கள் நிச்சயமாக அந்த காலம் வரும்போது நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் உள்ளதா என்ற கேள்விக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள்... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வ... மேலும் பார்க்க

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க