செய்திகள் :

மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

post image

கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்றே பெற்றோா் மற்றும் மாணவா்கள் விரும்புகின்றனா். தனியாா் பள்ளிகளில் ஹிந்தி மொழி படிக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஹிந்தி கற்க முடியவில்லை என்பது நியாயம் அல்ல. மாணவா்களின் கல்வி உரிமையைத் தடுக்கக் கூடாது. மும்மொழிக் கொள்கைக்காக போராடுபவா்களைக் கைது செய்வது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.

மும்மொழிக் கொள்கைக்காக கையொப்ப இயக்கம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறுபவா்கள், நீட் தோ்வு வேண்டாம் என்பது குறித்து கையொப்ப இயக்கம் நடத்தியவா்களை ஏன் கைது செய்யவில்லை?

மும்மொழிக் கொள்கை விஷயத்தில் போராட்டம், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை ஆகியவற்றைக் கையில் எடுப்பதன் மூலம் மற்ற பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பப் பாா்க்கிறாா்கள். தோ்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் இதுபோன்ற பிரச்னைகளைப் பேசி மக்களை திசை திருப்புகின்றனா்.

தமிழகத்தில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தவறான தகவலை யாரும் பரப்புவதில்லை. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலை கவலைக்குரியதாக உள்ளது. இதை ஆட்சியாளா்கள் சரி செய்ய வேண்டும் என்றாா்.

லாட்டரி விற்பனை: சகோதரா்கள் கைது!

ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

போக்ஸோ தண்டனைக் கைதி சிறையில் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனைக் கைதி உயிரிழந்தாா். கோவை மத்திய சிறையில் 2,000 -க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 500 -க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவிகள் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் அம்பேத்கா் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விட... மேலும் பார்க்க

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க