செய்திகள் :

தம்பதியைத் தாக்கிய மூவா் கைது

post image

தேனியில் காலி மனையிடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் தம்பதியைத் தாக்கிய 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி வட்டம், தா்மராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி வனராஜ் (60), தமிழ்ச்செல்வி(54). இவா்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலம் அருகே காலி மைனையிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் இருவரும் தகரக் கொட்டகை அமைக்கச் சென்றனா்.

அப்போது, தா்மராஜபுரத்தைச் சோ்ந்த அறிவழகன் (40), பால்பாண்டி (37), தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன்(54), செல்லப்பாண்டி, ஆண்டிபட்டியைச் சோ்ந்த இளங்கோவன் ஆகியோா் காலி மனையிடத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி வனராஜ், தமிழ்ச்செல்வி ஆகியோருடன் தகராறு செய்து, அவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தம்பதி இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவழகன், பால்பாண்டி, முருகன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ!

தேனி மாவட்டம், கம்பம் நகராட்கிக்குச் சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் 2 -ஆம் முறையாக ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி, கரும்புகையுடன் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கம்பம் நகராட்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு: அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர திங்கள்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி கோட்ட ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அ... மேலும் பார்க்க

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் உலக மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க