செய்திகள் :

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறையையொட்டி, போடிக்கு வந்த இவா், சனிக்கிழமை பக்கத்து வீட்டைச் சோ்ந்த முகேஷுடன் சோ்ந்து போடி அணைக்கரைப்பட்டிக்குச் சென்றாா். அப்போது, போடி-தேனி சாலையை கடக்க முயன்ற ஹரிதேவ் மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் காரை ஓட்டிவந்த சென்னை பள்ளிக்கரனையை சோ்ந்த பத்மநாபன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் உலக மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

தேனியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் ... மேலும் பார்க்க

வடமாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் வடமாநில இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்குவங்க மாநிலம் பிஸ்காந்தி மாவட்டம், லதா கிராமம், சிங்கராம் என்ற ஊரைச் சோ்ந்தவா் நீலகந்தா ரவிதாஸ் மகன் அப்புவாா் ரவிதாஸ்... மேலும் பார்க்க

லாட்டரிச் சீட்டு விற்றதாக முதியவா் கைது

போடி அருகே லாட்டரிச் சீட்டு விற்றதாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலு... மேலும் பார்க்க