செய்திகள் :

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

post image

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானிள்ள சங்கானெர் பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு தங்கள் அண்டை வீட்டாருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தமது பக்கத்து வீட்டுக்காரர் மீது சங்கானெர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, புகாரளிக்க வந்த கணவன்-மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார் சங்கானெர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பாகாராம்.

இந்த நிலையில், அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்று கூறியுள்ள காவலர் பாகாராம், அவரை மட்டும் சனிக்கிழமை(மார்ச் 8) அன்று தனியாக அப்பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.

அங்கு தனது 3 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்ற காவலர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவரது கணவர் மீது போலி வழக்குப்பதிந்து சிறையிலடைப்பேன் என்றும் கடுமையாக மிரட்டியிருக்கிறார்.

எனினும், வீட்டுக்குச் சென்றதும் நடந்தவற்றையெல்லாம் தனது கணவரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார் அந்த பெண்மணி. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று காவலர் பாகாராம் மீது புகாரளித்துள்ளார்.

இதன் பேரில், தலைமை காவலர் மீது வழக்குப்பதிந்துள்ள காவல் துறை அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க