செய்திகள் :

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

post image

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட 66 ஆயிரம் பணியிடங்களுக்கான முடிவுகளிலும் குளறுபடிகள் நீடிப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) சார்பில் ஆசிரியர் பணி நியமனத் தேர்வு 3.0 தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 22ஆம் தேதி வெளியானது. தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என பல்வேறு பிரிவுகளில் இத்தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியானது.

இந்நிலையில், ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி பிகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களில் ஒருவரான விக்ரம் குமார் பேசியதாவது,

பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத் தேர்வு எழுதியுள்ளோம். தேர்வு நடந்தபோது 87,774 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், 66,000 பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 21,000 காலிப் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை.

66 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு தரவுகளை பார்க்கும்போது அதிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு நடைபெற்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியானது. இதில் 35,000 - 40,000 தேர்வர்களின் முடிவுகள் மட்டுமே தெரியவந்துள்ளது. ஒரு தேர்வரின் பெயர் மூன்று விதமான பட்டியலிலும் உள்ளது. அவர் ஒரு பிரிவில் பணிக்குச் சேர்ந்தால், மற்ற இரு பிரிவுகளிலும் அப்பணி காலிப் பணியாகவே இருக்கும்.

அவ்வாறு காலிப் பணியிடங்களைத் தவிர்க்க துணைத் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 49 நாள்களாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆளும் கட்சியிலிருந்து ஒருவரும் எங்களை இதுவரை வந்து சந்தித்ததில்லை.

தேஜஸ்வி யாதவ் எங்களுக்கு ஆதவு அளித்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் கோரிக்கையை அவையில் அவர் முன்வைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க