செய்திகள் :

Men Psychology: ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை? உளவியல் ஆலோசகர் சொல்லும் காரணம் இதான்!

post image

நாள் முழுக்க வேலை செய்தாலும், ‘வீட்ல சும்மா தானே இருக்க’ என்கிற ஒற்றை வரியில் குடும்பத்தலைவிகளின் உழைப்பு மட்டம் தட்டப்படும். வேலைபார்க்கும் பெண்களுக்குச் சில கணவர்கள் வீட்டு வேலைகள் செய்கிறார்கள் என்றாலும், அதை உதவியாகத்தான் செய்கிறார்களே தவிர, தினசரி கடமையாகச் செய்வதில்லை. பெரும்பான்மை ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆண்கள் ஏன் வீட்டு வேலைகளைத்  தங்கள் கடமையாக நினைப்பதில்லை... இல்லத்தரசிகளின் உழைப்பை ஏன் அவர்கள் மதிப்பதில்லை... ஊதியம் கிடைக்காத உழைப்பில் ஆண்களுக்கு ஆர்வம் இருப்பதில்லையா...  கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ராஜவர்மன் விளக்குகிறார்.

’’நம் சமூகத்தில் பெண்களை வீட்டு வேலை செய்வதற்கான ஆட்களாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான், பெண் பார்க்கும் படலத்தின்போதே ’உனக்குச் சமைக்கத் தெரியுமா’ என்ற கேள்வியை இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  24 * 7 வேலை பார்க்கிற இந்தக் காலப் பெண்கள்கூட திருமணம் நிச்சயமானவுடனே யூ டியூப் பார்த்து சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். விளைவு, திருமணம் முடிந்தவுடன் வீட்டு வேலைகள் செய்வதில் முன் அனுபவமுள்ள பெண்ணின் கையில் கரண்டியும் துடைப்பமும் ஒப்படைக்கப்படுகின்றன.

வீட்டு வேலை

ஒரே பாலின தம்பதியர் வீட்டு வேலைகளையும், குழந்தைகளைப் பராமரிக்கிற வேலைகளையும் சரிசமமாகச் செய்கிறார்கள் என்கின்றன சில வெளிநாட்டு ஆராய்ச்சிகள். அதாவது, இரண்டு பாலினம் ஒரு வீட்டுக்குள் இருக்கும்போதுதான் ஒரு பாலினத்தை இன்னொரு பாலினம் வேலை வாங்குகிற பிரச்னை வருகிறதாம். இதில் வேலை பார்க்காத பெண், வேலை பார்க்கிற பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. முழுக்க முழுக்க பாலினம் சார்ந்த ஆதிக்க உணர்வு மட்டுமே இருக்கிறது என்கின்றன அந்த ஆராய்ச்சி முடிவுகள். இது உலகம் முழுக்க பொருந்துகிற உளவியல்தான். அதனால்தான், நம் நாட்டில் பெண் தேடும்போதே, வேலைக்குச் செல்கிற பெண் வேண்டும். அதே நேரம், தான் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாக அவள் தன்னைவிடக் குறைவாகச் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வேலைக்குப் போகாத பெண் என்றால், அவள்தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. ’அவ சமைக்கிற பாத்திரமும் அதைத் தேய்க்கிற நாரும் நான் வாங்கிக் கொடுத்தது. ஸோ, என்னோட பங்கு முடிஞ்சிடுச்சு. இதுல சமைக்கிறது உன்னோட பங்கு. நான் பொருள் வாங்கிக் கொடுத்தாதான் உன்னால சமைக்கவே முடியும். அதனால நீ செய்ற வீட்டு வேலைகளுக்கு நான் எதுக்கு மரியாதை கொடுக்கணும்’ - இப்படித்தான் இல்லத்தரசிகளின் உழைப்பு பார்க்கப்படுகிறது. இதில், காதல் திருமணம் செய்த கணவன் சரிசமமாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறான் என்பதற்கு இங்கே போதிய ஆதாரங்கள் இல்லை.

சமையலறையில்...

வீட்டுக்குள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட  மனைவியின் மீது எல்லா வேலைகளையும் சுமத்துவது, சோம்பேறித்தனம், வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லாமல் இருப்பது, யாராவது நம்மைக் கிண்டலடித்து விடுவார்களோ என்று தயங்குவது போன்ற தனிநபர் குணங்களும் வீட்டு வேலைகளைப் பெண்களுடைய ஏரியா என்றே முடிவு கட்டி வைத்திருக்கின்றன.
பெண்கள் வேலை பார்ப்பது அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், ஆண்களும் வீட்டு வேலைகளில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதுதான் வளர்ந்த சமூகத்துக்கான அடையாளமாக இருக்க முடியும்’’ என்றவர், எப்படிப்பட்ட ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது பற்றியும் பேசுகிறார்.  

‘’மனைவியுடன் இணக்கமான உறவில் இருப்பவர்களும், இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும்தான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்கள் வளர்ப்பால் உருவானவர்கள். இப்போது பல வீடுகளிலும் ஒற்றை பிள்ளைகள் இருப்பதால், அம்மாவுக்கு உதவி செய்கிற பிள்ளைகள் வருங்காலத்தில் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அம்மாவை வீட்டு வேலைக்காரியாக நடத்திய அப்பாவை ரோல்மாடலாக கொண்டு வளர்ந்தார்கள் என்றால், வருங்காலத்தில் மனைவியையும் அதேபோல் நடத்த முயன்று குடும்ப வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள்.

பெண்கள்தான் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்ற நிலைமை அடுத்த 30 வருடங்களில் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆணுக்கு பேட்டர்னிட்டி விடுமுறை கொடுத்தாலும், 30 வருடங்கள் கழித்தும் பெண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறார்கள். அவர்கள்தான் குழந்தையைப் பராமரிக்கப் போகிறார்கள். அதனால், வழக்கம்போல வீட்டு வேலைகள் பெண்கள் தலையில் விழுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

மருத்துவ உளவியலாளர் ராஜவர்மன்

வயக்காடு, வீடு, குழந்தைகள் பராமரிப்பு என்று ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அந்தக்காலப் பெண்களை ‘மாங்கு மாங்குன்னு வேலைபார்க்கிறா’ என்று பாராட்டினார்கள். அலுவலகம், வீடு, குழந்தைகள் படிப்பு, பராமரிப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிற இந்தக்காலப் பெண்களை ‘மல்ட்டி டாஸ்க்கர்’ என்று புகழ்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, போற்றுதலின் மறைவில் அவள் தலைமீது அத்தனை வேலைகளையும் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.

நான் சொன்னதையெல்லாம் வைத்து, சம்பளம் கிடைக்காத வீட்டு வேலைகளில் ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். செய்துதான் ஆக வேண்டும் என்கிற நிலைமையில் ஆண், வீட்டு வேலைகளையும் செய்வான். தண்ணீர்ப்பஞ்சம் வந்தால், பைக்கில் கயிறுகட்டி தண்ணீர்க்குடங்களை எடுத்துச்செல்கிற ஆண்கள்தான் இதற்கு உதாரணம். வாழ்க்கைத்துணைக்குச் சமமான மரியாதை கொடுக்கவில்லை என்றால், குடும்ப அமைப்பு சிதறும் என்கிற பயம் வரும்போது ஆண் தானாக மாறுவான். பெண்களின் பொருளாதார சுதந்திரம் மட்டுமே ஆணுக்கு அந்த பயத்தை ஏற்படுத்தும்.’’

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Honeymoon: திருமணமான புதிதில் செல்லும் சுற்றுலாவை ஏன் 'தேன்நிலவு' என அழைக்கிறோம் தெரியுமா?

நவீன வாழ்க்கை முறையில் திருமணத்தில் அல்லது திருமணம் சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் முதல் வெளி இடங்களுக்கு ஹனிமூன் செல்வது வரை திருமணம் சார்ந்த விஷயங்களில்... மேலும் பார்க்க

`ஆண்கள் என்றாலே பாவம்தானா...?" - உண்மை சொல்லும் மனநல மருத்துவர்

`நான் மகான் அல்ல' படத்தில் நடிகர் கார்த்தி 'இப்போலாம் குடும்பஸ்தனைப் பார்த்தா மரியாதை வருதுடா...' என்பார். நடுத்தரக் குடும்பத்தில், அப்பாவின் சிரமத்தை, உறவினர்களின் உதாசினத்தைப் பார்த்து வளர்ந்த 90's ... மேலும் பார்க்க

Relationship: பிடிக்காத கணவன்; வேறோர் ஆணிடம் ஈர்ப்பு... உளவியலும் தீர்வுகளும்..!

'நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' - விருப்பமில்லாத திருமணமும் மனதுக்குப் பிடிக்காத ஆணும் தன் வாழ்க்கையில் நுழைந்தால் ஒரு பெண் எப்படி உணர்வாள் என்பதை விளக்கும் 'மெளனராகம்' பட வசனம் இது.... மேலும் பார்க்க

வரதட்சணை: ``ரூ.5 லட்சம் வேண்டாம்; ஒத்த ரூபாய் போதும்" - மணமகள் வீட்டாரை நெகிழ வைத்த மணமகனின் செயல்!

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் எப்படி தவறோ, அதுபோல வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறுதான். ஆனால், படித்த முன்னேறிய சமூகத்தினர் கூட வரதட்சணையை இன்றைய காலகட்டத்தில் வாங்காமலோ கொடுக்காமலோ இர... மேலும் பார்க்க

Dating: 8 ஆண்டுகள், 2000 டேட்டிங் தோல்விகள்... இறுதியில் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பான் இளைஞர்!

மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினத்துக்கும் தனக்கான ஒரு துணையைத் தேடிக்கொள்வது வாழ்வின் இன்றியமையாத போராட்டமாக அமைகிறது. சில உயிர்களுக்கு அது வெறும் உயிரியல் துணைதான் என்றாலும், அதற்காக உயிர்போகும் வரை ... மேலும் பார்க்க

Relationship: பெண்களின் முகமா; குணமா? எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

அக இலக்கியங்களில் ஆரம்பித்து முகநூல் கவிதைகள் வரைக்கும், பெண்களின் குணத்தைவிட அவர்களுடைய புற அழகைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு எண்ணிடலங்கா சாட்சிகள் இருக்கின்றன... ஆண் ஏன் காலங்காலம... மேலும் பார்க்க