செய்திகள் :

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

post image

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

குஜராத் டைட்டன்ஸில் மேத்யூ வேட்

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சாம்பியன். போராட்ட குணம் கொண்ட வீரர். தற்போது நமது அணியின் உதவிப் பயிற்சியாளர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம் மேத்யூ வேட் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மேத்யூ வேட், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் பார்த்திவ் படேலுடன் இணைந்து செயல்படவுள்ளார்.

மேத்யூ வேட் இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளார். அவர் விளையாடியுள்ள 15 போட்டிகளில் 12 போட்டிகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் மேத்யூ வேட் அங்கம் வகித்துள்ளார்.

இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த மேத்யூ வேட், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்குபெறாதது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது. மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றன... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்ற... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க