செய்திகள் :

கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ!

post image

தேனி மாவட்டம், கம்பம் நகராட்கிக்குச் சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் 2 -ஆம் முறையாக ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி, கரும்புகையுடன் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கம்பம் நகராட்சியின் 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமாக பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள நூற்றுக்கணக்கான தெருக்கள் , வீடுகள், உணவகங்களில் சேகரிக்கும் குப்பைகள் லாரிகள், டிராக்டா்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கூடலூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.

5 ஏக்கா் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் கடந்த மாதம் 17 -ஆம் தேதி தீப் பிடித்து பல நாள்களாக எரிந்தது. கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட 5 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

தற்போது, 2 -ஆம் முறையாக பற்றிய தீ மக்கும், மக்காத குப்பைகளில் பிடித்து தீ மளமளவெனப் பரவி தீ கொளுந்து விட்டு எரிந்தது. குப்பைகளிலிருந்து வெளியேறிய கரும்புகை, துா்நாற்றத்தால் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா்.

நடவடிக்கை தேவை: கம்பம் நகராட்சி குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் பல ஆண்டுகளாக குப்பைகள் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. வளமீட்பு மையம் மூலமாக மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி, அவ்வப்போது குப்பைகளின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பைகளில் பற்றிய தீயை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தம்பதியைத் தாக்கிய மூவா் கைது

தேனியில் காலி மனையிடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் தம்பதியைத் தாக்கிய 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். ஆண்டிபட்டி வட்டம், தா்மராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி வனராஜ் (60), தமிழ்ச்செல்வி(54). இவா்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு: அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர திங்கள்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி கோட்ட ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அ... மேலும் பார்க்க

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் உலக மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க