செய்திகள் :

மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!

post image

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயிலில் ஏறி இறங்கவேண்டும். சில நேரங்களில் இறங்கவேண்டியவர்கள் இறங்க முடியாமல் அடுத்த ரயில் நிலையத்திற்கு சென்ற சம்பவங்கள் நடப்பதுண்டு. ரயில் புறப்படும் போது ஏற முயன்று கீழே விழுந்து பயணிகள் உயிரிழப்பதும் அதிகமாக நடக்கிறது. மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அந்நேரம் அவரது பிடிதளர்ந்து கீழே விழுந்து ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டார். அந்நேரம் அருகில் நின்ற ரயில்வே பாதுகாப்புபடை வீரர் விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை வெளியில் இழுத்து காப்பாற்றினார்.

சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும் அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சகம் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது. அதோடு ரயில் செல்லும்போது ஏறவோ இறக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவை பார்த்து பலரும் ரயில்வே போலீஸாரின் பணியை பாராட்டியுள்ளனர். சிலர் இது போன்ற சம்பவங்களை தடுக்க தானியங்கி கதவுகளை பொருத்தும்படி தெரிவித்துள்ளனர். சிலர் இது போன்ற காரியத்தில் ஈடுபடும் ரயில்வே போலீஸாரை சம்மானம் கொடுத்து கெளரவிக்கவேண்டும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள போரிவலி ரயில் நிலையம் எப்போதும் மிகவும் பிஸியாகவே காணப்படும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பி.எம்.டபிள்யூ காரை நடுரோட்டில் நிறுத்தி, சிறுநீர் கழித்த வாலிபர்... மது போதை காரணமா?

நாட்டில் வாகன நெருக்கடி அதிகமான நகரங்களில் புனேயும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகமுள்ள நகரமாக புனே விளங்குகிறது. புனேயில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக... மேலும் பார்க்க

Chhaava: தங்க புதையலை தேடி மொகலாய மன்னன் கோட்டையில் குழி தோண்டிய மக்கள்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்!

சமீபத்தில் நடிகர் விக்கி கெளஷல் நடித்து வெளி வந்த சாவா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஷாருக், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

பாலிவுட் நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் வந்தன. ஆனால் இது எங்களது தொழில் என்று சில நடிகர்கள் கூறிவிட்டனர். ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திரா ... மேலும் பார்க்க

``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை..'' வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான். டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறி... மேலும் பார்க்க

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது த... மேலும் பார்க்க

கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?

மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ... மேலும் பார்க்க