செய்திகள் :

Chhaava: தங்க புதையலை தேடி மொகலாய மன்னன் கோட்டையில் குழி தோண்டிய மக்கள்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்!

post image

சமீபத்தில் நடிகர் விக்கி கெளஷல் நடித்து வெளி வந்த சாவா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் தியேட்டரில் திரையிட்டபோது சாம்பாஜி மகாராஜாவாக வேடமணிந்து குதிரையில் தியேட்டருக்குள் வந்த சம்பங்களும் நடந்திருக்கிறது. அதோடு சாம்பாஜி மகாராஜாவிற்கு ஆதரவாக தியேட்டரில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இப்போது சாவா படத்தை பார்த்துவிட்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மொகலாய மன்னர்கள் புதைத்து வைத்திருக்கும் புதையலை தேடி புறப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்கன்பூர் என்ற இடத்தில் இருக்கும் மொகலாயர்கள் கட்டிய ஆசிர்கர் கோட்டையில் தங்கத்தை மொகலாய மன்னர்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று கருதி கிராம மக்கள் கோட்டையைச் சுற்றி புதையலை தேட ஆரம்பித்தனர். அவர்கள் மாலை 7 மணிக்கு குழி தோண்ட ஆரம்பித்தனர்.

சிலர் தங்கத்தை தேட மெட்டல் டிடெக்டரையும் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்தனர். இருட்டாகிவிட்ட நிலையில் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டு ஏராளமானோர் தொடர்ந்து குழி தோண்டினர்.

சாவா படத்தை பார்த்துவிட்டு ஆசிர்கர் கோட்டையில் தங்கத்தை மொகலாயர்கள் புதைத்து வைத்திருப்பதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டதை நம்பிக் மக்கள் மெட்டல் டிடெக்டருடன் ஆசிர்கர் தோண்டுவதாக பத்திரிகையாளர் காசிப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகாலை 3 மணி வரை அவர்கள் புதையலை தேடி மண்ணை தோண்டிக்கொண்டிருந்தனர். இது குறித்து யாரோ போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரை கண்டதும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். பத்திரிகையாளர் காசிப் ட்விட்டர் பக்கத்தில் மக்கள் புதையலை வெட்டி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டதும் அந்த வீடியோ வைரலானது. அதனை 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆசிர்கர் கோட்டை மொகலாயர்களோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும். இக்கோட்டையில் ஒளரங்கசீப் தனது புதையலை மறைத்து வைத்திருப்பதாக தகவல் வெளியானதால் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது.

மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயி... மேலும் பார்க்க

பி.எம்.டபிள்யூ காரை நடுரோட்டில் நிறுத்தி, சிறுநீர் கழித்த வாலிபர்... மது போதை காரணமா?

நாட்டில் வாகன நெருக்கடி அதிகமான நகரங்களில் புனேயும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகமுள்ள நகரமாக புனே விளங்குகிறது. புனேயில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக... மேலும் பார்க்க

பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஷாருக், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

பாலிவுட் நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் வந்தன. ஆனால் இது எங்களது தொழில் என்று சில நடிகர்கள் கூறிவிட்டனர். ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திரா ... மேலும் பார்க்க

``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை..'' வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான். டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறி... மேலும் பார்க்க

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது த... மேலும் பார்க்க

கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?

மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ... மேலும் பார்க்க