செய்திகள் :

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

post image

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிர்மிங்காமில் தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறிய நகரில் வாழ்ந்து வரும் பமேலே மன், பிரசவத்தை நினைத்து அச்சம் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவர் பிரசவ அறையில் அறுவைசிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்த போது, குழந்தையைப் பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும்தான் அடக் கடவுளே என்று வாயைப் பிளந்தனர்.

இதனைக் கேட்ட தனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், என்ன நடந்திருக்கும் என்று யோசித்ததாகவும், பிறகுதான் தனக்கு குழந்தையை காட்டியபோது தானும் அவர்கள் அடைந்த அதே அதிர்ச்சியை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

காரணம், பிறந்த குழந்தையின் எடை 13 பவுண்டுகள் இருந்துள்ளது. ஆனால், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடை வெறும் 7 பவுண்டுகள்தான். இரண்டு மடங்கு அதிக எடையுடன் குழந்தை பிறந்ததால்தான் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும் குழந்தையின் தலையில் இளச்சிவப்பு நிற ரிப்பன் வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பதாகவும், இவர் பிறந்து மூன்று நாள்கள்தான் ஆகிறது. ஆனால் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று செவிலியர்கள் கூறுகிறார்கள்.

பிறந்து ஆறு மாதம் ஆனக் குழந்தைகளுக்கான ஆடையை இவரது தாயார் அணிவித்து விடுவதாகவும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 1955ஆம் ஆண்டு இத்தாலியில் 22 பவுண்டு எடையுடன் பிறந்தகுழந்தைதான் அதிக உடல் எடையுடன் பிறந்த குழந்தை என்று உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதன்பிறகு, 2019ஆம் ஆண்டு நியூ யார்க்கில் 15 பவுண்டு எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க

என்னை இங்கு புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது.பிறக்கும்... மேலும் பார்க்க

30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம... மேலும் பார்க்க