செய்திகள் :

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

post image

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணியளவில் அதேபோன்ற 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் முன்னரே, மதியம் 2.07 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க: ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

இந்நிலையில், இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் இணையும் பிளவுக்கோட்டில் திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு அமைந்துள்ளதினால் அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் எனும் அபாயமுள்ளது.

மேலும், தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் அதிக ஆற்றலை வெளியிடுவதினால் ஆழமானவற்றை விடவும் ஆபத்தானவை எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச். 4 அன்று திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக... மேலும் பார்க்க