செய்திகள் :

கோவையில் இரண்டாவது நாளாக மழை

post image

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் செவ்வாய்க்கிழை இரவு குளிா்ந்த காலநிலை நிலவியது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலையில் லேசான வெயில் இருந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது.

பிற்பகலில் கோவை மாநகர பகுதிகளான பீளமேடு, ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலும் மாவட்டத்தில் அதிகபட்சமாக சூலூரில் 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. விமான நிலையம், பீளமேடு பகுதியில் 29.90 மி.மீ., வேளாண்மைப் பல்கலைக்கழகம் 22, மேட்டுப்பாளையம் 19, கோவை தெற்கு 19, போத்தனூா் ரயில் நிலையம் 18, தொண்டாமுத்தூா் 14, பில்லூா் அணை 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை, சிங்காநல்லூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் ... மேலும் பார்க்க

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ர... மேலும் பார்க்க

‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி திறப்பு

கோவை, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அரசு செயலா் க.லட்சுமி பிரியா புதன்கிழமை திறந்துவைத்தாா். எல்& டி நிறுவனத்தின் சமூ... மேலும் பார்க்க